புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஆர்டிஓ முருகேசன் அறிவித்துள்ளார்.