கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கேபிசிசி தலைவர் டி கே சிவகுமார் டெல்லி சென்றுள்ளார். முதல்வர் பதவிக்கு முன்னிலையில் உள்ள மூத்த தலைவர் சித்தராமையா திங்கட்கிழமை டெல்லி சென்றார்.

இதனை தொடர்ந்து செய்துவர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா, கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் விவகாரத்தில் 72 மணி நேரத்தில் முடிவு எட்டப்படும் என தெரிவித்தார். மேலும் ஊடகங்கள் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.