குடும்பம் செழிக்க அம்மனை வழிபடுவது தான் நவராத்திரி விழாவாகும். கொலு வைத்து வழிபடுவது வீட்டிற்கு மிகவும் சிறப்பு. புதிதாக கொலு வைப்பவர்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு பத்து நாட்களும் காலை மாலை என இரண்டு வேளையும் நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டில் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் கொலுபடிகள் அமைத்து நவராத்திரி விழாவை தொடங்கலாம். இதனைத் தொடர்ந்து கொடுப்பபடிகளை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். அதனைப் போலவே வீட்டில் புதிதாக கொலு வைப்பவர்கள் புதிய பொம்மை வைப்பதே நன்மை தரும்.