தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வரம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2-வது பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜெயம்ரவி, புதுச்சேரி காரைக்கால் அடுத்த திருநள்ளாறிலுள்ள புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயிலில் நேற்று (பிப்.,26)ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்றார்.