செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் தேவ் தன்னுடைய நண்பருக்கு பிறந்தநாள் பரிசாக நாட்டு வெடிகுண்டை கொடுத்தார்.

அதனை தீபக் கையில் இருந்து வீசி வெடிக்க வைத்த நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் வெளியிட அது மிகவும் வைரலானது. இது பற்றி போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வந்த நிலையில் தீபக் பிடிபட்டார்.

அதாவது போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தீபக் தலைமறைவான நிலையில் அவர் இருக்கும் இடம் தெரிந்து போலீசார் சென்றபோது அவர் தப்பி ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

பின்னர் அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.