“இழந்த காதலி/காதலனை திருமணத்துக்கு பிறகு நீங்கள் சந்தித்தால், நீங்கள் பேச நினைப்பது?” என்று நடிகர் பார்த்திபன் தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து இது இணையத்தில் படு வைரலானது. பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் இதற்கு பதிலளித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் பார்த்திபனைத் தொடர்ந்து,GVM, வெங்கட் பிரபு, தங்கர் பச்சான் உள்ளிட்டோரும் இதே கேள்வியை தங்களது x பக்கங்களில் கேட்டுள்ளனர். இதனால் இணையமே கலகலப்பாக மாறியுள்ளது.