பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ள நிலையில், தற்காலிகமாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்டு காஞ்சிபுரம் ஆர்டிஓ சார்பில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில், அவரது விளக்கத்தை பெற்ற பின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவோ அல்லது தற்காலிகமாக முடக்கவோ நடிவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் நேற்று கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.