தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி பார்க் போ ராம்(30) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது நண்பர்களுடன் விருந்துக்குச் சென்று மது அருந்தியுள்ளார். அதன் பிறகு ஓய்வு அறைக்கு சென்ற அவர் அங்கு மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.