கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சலா (34) மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூருவில் நடைபெற்ற ஏஜிஎஸ் தென் மண்டல கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணியை கர்நாடகா அணி வீழ்த்தியது. இப்போட்டிக்கு பின் இரவு உணவு உண்ணும்போது திடீரென்று ஹொய்சலா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர் கர்நாடகா பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.