மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ் (31). அதன் பிறகு மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் உதவி இயக்குனராக மனு ஜேம்ஸ் பணி புரிந்தார். இவர் ஏராளமான குறும்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது நான்சி ராணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மனு ஜேம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயர்ந்துள்ளார். இவருடைய திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மனு ஜேம்ஸ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.