உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகை அலுவலகம் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் லக்னோவின் சின்ஹட் பகுதியில் அந்த நபர் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அங்கு சோதனை நடத்திய போது 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஈமெயில் மூலமாக மிரட்டல் விடுத்தது அந்த சிறுவன் தான் என போலீசார் உறுதி செய்தனர். பீகாரை சேர்ந்த அந்த சிறுவன் பிளஸ் ஒன் முடிந்து பிளஸ் டூ படிக்க உள்ளான். தற்போது போலீசார் அவன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.