
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிஷான் திட்டத்தின் 13 ஆவது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் தவணை 2000 ரூபாய் வருகின்ற மார்ச் மாதம் 8-ம் தேதி விவசாயிகள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது . இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.