தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகின்றார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் பாலிவுட்டில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிர்சா முண்டா, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார்.