பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார்.

அப்போது ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம் உங்களுக்கு பிறகு பாலிவுட் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி எழுப்பினார். அதாவது ஷாருக்கான் சினிமாத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ரசிகர் கேள்வி எழுப்பிய நிலையில் நான் ஒருபோதும் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என ஷாருக்கான் கூறினார். மேலும் ஒரு வேலை என்னை சினிமாவில் இருந்து நீக்கினாலும் நான் மிகவும் சூடானவனாக மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியுள்ளார்.