
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா தனது மகள்களான சங்கமித்ரா, சஞ்சு மித்ராவுடன் நேற்று ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சௌமியா அன்புமணி தனது மகள்களுடன் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான நம்பு நாயகி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவில் முன்பு இருக்கும் அம்மியில் சங்கமித்ராவும், சங்சுமித்ராவும் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். அரைக்கப்பட்ட மஞ்சள், பூ மாலை, மாம்பழங்களை நம்பு நாயகி அம்மனுக்கு படைத்து சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் கொடுக்கப்பட்டது.