
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு 6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30க்கும் மேற்பட்ட மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணு தற்போது 5364 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்துள்ளார். இதனால் மாணவி ரேணுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டு எவரெஸ்ட் சிகர அடிவார முகாமை அடைந்த மாணவி ரேணு வெங்கடேஷை பாராட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.