
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாணி பூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று நேற்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் பானி பூரியின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர். சென்னையில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுகாதாரமான பானி பூரியை தாராளமாக சாப்பிடலாம், ஆனால் பானிபூரி மற்றும் பானியானது மிகவும் கலராக இருந்தால் அதை குடிக்கக்கூடாது. மீறினால் சுகாதாரக் கேடு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.