விஜய் தொலைக்காட்சியில் பல பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இப்போது கிழக்கு வாசல் எனும் புதிய சீரியல் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. அதோடு இதில் சஞ்சீவ் கமிட்டாகி இருந்தார். எனினும் சில காரணங்களால் இவர் வெளியேறினார். இவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வெங்கட் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் போது எவ்வாறு புது சீரியலில் நடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வெங்கட் “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடும். இதன் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவதற்கும் புது சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும்” என கூறியுள்ளார்.