தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு துளியும் இடமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஓபிஎஸ், சசிகலா, TTV தினகரன் போன்றவர்களுடன் பாஜக அமைத்த கூட்டணியை தமிழக மக்கள் செல்லாக்காசாக தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது. பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லும் கட்சிகள் அழிந்துபோகும்” எனத் தெரிவித்தார்.