தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்டி ராமராவின் பேரன் ஆவார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் நடைபெற்ற ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் நந்தமுரி தாரகா ரத்னா கலந்து கொண்ட போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இன்னும் 2 நாட்கள் கழித்தே நந்நமுரி உடல்நலம் குறித்து எந்த ஒரு தகவலையும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

மேலும் இது குறித்து நடிகரும் நந்தமுரி தாரகா ரத்னாவின் மாமாவும் ஆன பாலகிருஷ்ணா கூறும் போது, தாரகா ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வருகிறார்கள் என்றார்.