பழனி மலை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 23ஆம் தேதி இன்று ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் இழுவை ரயிலுக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது.

இரண்டே நிமிடங்களில் மலைக் கோவிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் சேவை பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் காலை ஏழு மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் கார் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் நிறுத்தப்படும். அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் ரோக்கர் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.