தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் காலாண்டு தேர்வுகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

செப். 28ம் தேதி முதல் அக். 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். எனவே, செப்.27ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.