கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிரளவைக்கும்  சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி செல்லும் வழியில் தனியாக நடந்து சென்ற மாணவியை தெருநாய்கள் கூட்டமாக தொடர்ந்து விரட்டின. அச்சத்தில் ஓடிய மாணவி, தனது பையை வீசியதன் மூலம் அந்த நாய்களின் கவனம் மாறி, உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

தெருநாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் நிலைமைக்கு காரணமான நகராட்சித் துறையின் அலட்சியமும் இந்தச் சம்பவத்தால் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.