தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு மாணவர்களும் உற்சாகத்துடன் பயில்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு நான் முதல்வன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக்கு ஆலோசனை வழங்குதல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE, CLAT போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புகள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் படித்தவர்களுக்கு உதவி தொகைகள் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.