மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே தேர்வு -ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை போன்ற அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும்  என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.