விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சொர்ணலட்சுமி (40), இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியாக பணியாற்றி வந்தார். தனது தோழி பிரபா (42) உடன் மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி தோழியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பிரபா ஐஏஎஸ் அதிகாரி செல்வத்தின் மனைவி ஆவார்.

இந்த நிலையில் மாதவரம் 200 அடி சாலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டனா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சொர்ணலட்சுமி மற்றும் பிரபா மீது வேகமாக வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சொர்ணலட்சுமியின் மீது  கன்டெய்னர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த பிரபாவிற்கு இரண்டு கால்களும் முறிந்து, படுகாயமடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.