திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 வெளிமாநிலங்களில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திருவண்ணாமலை ஏடிஎம்கள் கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்களை கண்டுபிடித்துவிட்டதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானாவை சேர்ந்தவர்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் கிடைத்துவிட்டது. விரைவில் பணத்தை மீட்டுவிடுவோம் என அவர் தெரிவித்தார். திருவண்ணாமலையில் மொத்தம் 4 ஏடிஎம்களில் 775 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.