
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த மாணவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.