சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் செவிலியர் கண்டித்ததால் தற்காலிக வார்டு பாய் ஜான்சன் பாத்திரத்தில் கத்தியால் குத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வார்டு பாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.