
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என அனைத்து நடத்துநர்களுக்கும் போக்குவரத்து கழகம் அறிவுறித்தியுள்ளது. பயணச்சீட்டினை பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்க வேண்டும்.
பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார் வந்தால் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது