சீர்காழி அருகே டேங்கர் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 26 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட அந்த விபத்து அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.