பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்ய முயன்று, அது பயங்கரமான விபத்தில் முடிந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொது மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், அதிவேகமாகச் சென்ற அந்த இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்ததாகத் தெரிகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் போதே பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. சாகசம் என்ற பெயரில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

“>

மேலும் சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “சாலையில் இது போன்ற சாகசங்கள் செய்வது தற்கொலைக்குச் சமம்” என்று கூறியுள்ளார்.

இதனால் “இளைஞர்கள் தங்களின் உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செய்யப்படும் இத்தகைய செயல்கள், சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது என்பதே நிதர்சனம்.