பாகிஸ்தானை சேர்ந்த சீமா குலாம் ஹைதார் என்ற பெண் ஒருவர் டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை கேமிங் செயலியான பப்ஜி கேமில் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் ஆன்லைனில் சாட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது இறுதியில் காதலாக மலர்ந்த நிலையில் சீமா நேபாளம் வழியாக தனது நான்கு குழந்தைகளுடன் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.

முதலில் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு சென்ற அவர் பேருந்தில் பயணித்து சச்சின் வசித்து வந்த கிரேட்டர் நொய்டாவை அடைந்துள்ளார். அதன் பிறகு இருவரும் நான்கு குழந்தைகளுடன் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து சீமான் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிந்ததும் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.