பனங்கிழங்கை இன்று முதல் சாப்பிட்டு பழகுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்த சீமைக் கருவேலம் விஷ விருட்சம். உள்ளூரில் மறக்கப்பட்ட பனை மரம் அமிர்த விருட்சம். இது மிகப்பெரிய ஒரு தேசியச் செய்தி. சீசனுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் குடல் மட்டும் பனங்கிழங்கை செரித்து விட்டால், உங்கள் உடலுக்கு ஒரு தீங்கும் ஏற்படப் போவது இல்லை என கூறியுள்ளார். தமிழர்களின் வாழ்வியலோடு கலந்துள்ள பனங்கிழங்கு உடல் ஊட்டச்சத்துகளை வழங்கும் ஒரு அற்புத இயற்கை உணவாகும்.