பதவி ஆசை கூறி தன்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்ததாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். தென்காசி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், ‘இப்போதுதான் பலர் பாஜகவில் இணைகின்றனர். ஆனால், 2014இல் பெட்ரோலியம், துறைமுக துறைகளில் முக்கிய பொறுப்பு தருவதாகக் கூறி என்னை அழைத்தனர். ஆனால், இந்த மண்ணையும், மக்களையும் நேசித்ததால் நான் அங்கு செல்லவில்லை’ எனக் கூறியுள்ளார்.