தமிழ்நாடு அரசு 55 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது. அதில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனும் ஒருவர். இவர் திருநங்கை சமூகத்தினருக்கு செய்த நலத்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் தாங்கள் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் பெயரை சூட்டி கௌரவித்தனர்.

இன்று திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து நன்றி சொல்லி கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவையும் திருநங்கைகள் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும்.