பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதை நான் பார்க்கிறோம். இந்நிலையில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதாவது பஞ்சாலைகள், டெக்ஸ்டைல், ஸ்பின்னிங் மில்களில் பெண்கள் பலரும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஈரோட்டை சேர்ந்த கருப்பசாமி என்பவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்  தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு விளக்கமளித்துள்ளது. மேலும் இந்த  வழக்கு மார்ச் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.