
சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய வங்கிக்கணக்கில் இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது, அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று 32 லட்சத்தை வேறு ஒரு வங்கி கணக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்களுடைய வங்கி கணக்கில் அனுப்பியுள்ளனர். இதனால் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து விசாரணை முடிந்ததும் மீண்டும் வங்கி கணக்கு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளனர்.