வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது முதியோர்களுக்கான மிகச் சிறந்த திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். வயதான காலத்தில் பணத்திற்காக மற்றவர்களை சார்ந்து இருக்காமல் இருக்கவும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவதற்கும் இந்த திட்டம் உதவும்.

நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிக விரைவாக முதலீடு செய்வது மிகவும் அவசியம்.  இந்த திட்டத்தில் முதலீடு செய்வது வங்கிகளில் உள்ள  பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிகம். இந்த சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்கள் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இதன் மூலமாக ஒரு காலாண்டிற்கு 10250 வருமானமும் ஈட்ட முடியும். வட்டி மட்டும் ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.