தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து இந்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒரத்தநாடு வட்டம், தெலுங்கன், குடிகாடு கிராமத்தில் தொடங்கும் வடகாடுகிளை கால்வாய் அதன் கிளை கால்வாய்கள் மற்றும் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை வட்டங்களில் உள்ள ஏரிகள் புனரமைக்கப்படுகிறது.

இந்நிலையில் வருகிற 2-ம் தேதி காலை 11 மணிக்கு இதுகுறித்து தஞ்சை மாவட்ட பட்டுக்கோட்டை தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள பி.ஆர்.டி திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை இன்ஜினியர்கள் கலந்து கொள்கின்றார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.