
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. இதன் அருகே உடல் முழுவதும் சில்வர் நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது. இந்த குழந்தை தூங்கி தூங்கி விழுந்தபடி வெயிலில் சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது. இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் நாரா லோகேஷை டேக் செய்திருந்தார்.
அதாவது அந்த குழந்தையை அடித்து கொடூரமாக துன்புறுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும் உணவு கூட கொடுக்காமல் இப்படி கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் அந்த குழந்தைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் குழந்தை வெயிலில் தூங்கி தூங்கி விழுந்தபடி பரிதாபத்தோடு பிச்சை எடுக்கும் காட்சிகள் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
@naralokesh Good Morning Sir,it’s a pleasure to write https://t.co/TPDAhiw3V1 is child I mentioned seen in kurnool City on roads brutally beaten up and not even given food.Please arrange your team and refuse https://t.co/xUUP5U7WYm dress circle shopping mall kurnool city. pic.twitter.com/Y3CENA2ne4
— Santhosh Kumar (@SanthoshKu34277) November 20, 2024