2023 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நகரங்களில் 28.20 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டதாக ஐநா உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், போர், காலநிலை மற்றும் பொருளியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் 2.40 கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.