தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர் புறங்களில் பல்வேறு வகையான நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு இணைய வழியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நில உரிமையாளர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணைய வழி சேவைகள் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இணையவழி சேவையை https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றை நகர்ப்புற நில அளவை பதிவேட்டின் நகல் நகர நில அளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம்/ அறிக்கை ஆகியவற்றையும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பல பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டாலும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும் இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களை வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.