மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்து உரிமையாளர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு குழு மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.