மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பஷான்-பனேர் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இங்கு ஜெரிலின் டி சில்வா என்ற பெண்மணி தன்னுடைய 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று  ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் அவருக்கு வழி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால அவர் 2 கி.மீ தூரத்திற்கு பின் தொடர்ந்து சென்ற நிலையில் ஒரு கட்டத்தில் திடீரென ஸ்கூட்டிக்கு முன்பாக சென்று காரை நிறுத்தினார். இதனால் பயந்து போன அந்த பெண் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டார்.

பின்னர் அந்த நபர் காரில் இருந்து இறங்கி வந்த நிலையில் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து மூக்கில் குத்தினார். இதில் அவருக்கு ரத்தம் வழிந்தது. அதோடு விடாமல் ஒரு பெண் என்று கூட பாராமல் நடுநோட்டில் அவரை சரமாரியாக தாக்கினார். உடனடியாக அங்கு கூட்டம் கூடியதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோ வைரலானதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.