மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பான செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து எம்பிக்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ற வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டை யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு பட்ஜெட் சிறப்பான முறையில் இருக்கிறது.‌ பட்ஜெட்டில் எப்போதுமே ஏழை மக்களுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு உதவிகள் செய்யப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.