பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் (24) சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவியின் மகனான கமலேஷின் உடல், இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.