நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும், பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.