
சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே சென்றபோது சிறுவனின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.