உத்திரபிரதேச மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அந்த நபருக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் திடீரென அவரின் வீட்டிற்குள் நுழைந்து தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்புமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் விடாது அவரை வற்புறுத்திய நிலையில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி எவ்வளவோ அவர் மறுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டினார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல் நலம் சீராக இருக்கிறது. இந்நிலையில் அவர் தனக்கு நடந்த துயரங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் அந்த நபர் தான் தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்கும் முயற்சி செய்ததாகவும் அதனால் தான் ஆணுறுப்பை வெட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை  நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.